Pages

Tuesday, November 13, 2012

தீபத் திருவிழாவாம் தீபாவளி!

Deepavali Fireworks

தீபாவளி என்றாலே மனதில் வருவது பட்டாசு
ஆசையாய் கொளுத்தினாலும் கரியாய் போவதோ காசு
ஆசை தீர கொளுத்தினாலும் திருப்தியடையாது மனசு
திரும்பத் திரும்ப தேடுவார் பட்டாசு வகைகளில் புதுசு

தீபாவளி வந்தாலே எல்லா கடைகளிலும் அமோக விற்பனை
கடை கடையாய் ஏரியும் பூர்த்தியாகாத வீட்டாரின் நிபந்தனை
கட்டி கட்டி போட்டு போட்டு பார்த்தாலும் திருப்தியடையாததால் மன வேதனை
திரும்பவும் கடைக்குப் போய் மாற்றிவிட்டு வந்தால் சாதனை
 
தீபாவளி என்றாலே வீடுகள் தோறும் செய்யப்படும் பலகாரம்
வகை வகையாய் ருசி ருசியாய் சாப்பிட்டாலும் மாறாததோ மன பாரம்
வாரந்தோறும் விழாதோறும் கோயிலுக்குப் போய் செய்வார் பரிகாரம்
திரும்பத் திரும்ப செய்தும் மறைந்து போகாததோ பாவ தோஷம்
 
தீபாவளி வந்தால் சேர்ந்தே வந்திடும் புதுப் படம்
முன் பதிவு செய்தோ வரிசையில் நின்றோ பார்த்திட போராட்டம்
மூன்று மணி நேரம் பார்த்தும் நிரம்பாத மனதின் வெற்றிடம்
திரும்பத் திரும்ப பார்த்தாலும் வெறுமை வாட்டி வதைத்திடும்
 
தீபாவளி என்றால் தீபங்களால் வீடுகள் அலங்கரிக்கப்படும்
வீட்டை தீபம் அலங்கரித்தாலும் உள்ளமோ இருளடைந்திருக்கும்
விண்ணவரின் ஒளி உள்ளத்தில் உதித்து உருமாற்றாத மட்டும் 
தீபாவளி தீபம் வெறும் வெளிப்படை வேஷமாய் இருந்துவிடும் 
 
பட்டாசை அல்ல மனதில் உள்ள அசிங்கத்தை கொளுத்த வேண்டும்
புது ஆடைகள் அல்ல புதிய மனுஷனாய் மாற வேண்டும்
பலகாரங்கள் ருசியாய் செய்வதல்ல வாழ்க்கை ருசியாய் மாற வேண்டும்
புதுப் படம் பார்ப்பதல்ல புதிய நற்குணங்கள் வெளிப்பட வேண்டும்
 
தீராத சாபம் தீராத தோஷம் நீங்கிட மனந்திரும்பிடு
தீப ஒளியை ஏற்றிவைக்கும் கரங்களால் வேதாகமத்தை ஏந்திடு
தீய பழக்கங்கள் அகன்றிட எரிந்திட இயேசுவை ஏற்றிடு
தீய மனம் மாறிட உன் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திடு

4 comments:

  1. Replies
    1. Thank you Joshua. Praise be to God who enables!

      Delete
  2. Replies
    1. Thank you Anand. Praise be to God the Enabler and the One who gives the seed to the sower. (2 Co 9:10)

      Delete